Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Sunday, April 6, 2014

EB- MOBILE NUMBER REGISTRATION


மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்
இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்
அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும்.
இந்த செய்தியை தங்கள் பகிர்ந்து உதவவும்.

http://tneb.tnebnet.org:8087/mobilenoupd/

வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, பொருள்கள் சரிபார்த்தலுக்கான குறிப்பேடுகள், முகவருக்கான கையேடு


 
2014 CLICK HERE
 
 
 
 TO KNOW THE DUTIES OF POLLING AGENTS AND
 
 VARIOUS FORMS USED )

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலருக்கான 124 முக்கிய குறிப்புகள்

Sunday, March 30, 2014

முட்டாள்கள் தினம் எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?

வரலாற்றில் இருந்து ஒரு தகவல் :

1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...
அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது.... 

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்... இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்... ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்.. இதிலிருந்து தான்
விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலண்டரில் ஏப்ரல் 1 ஆம்

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார்.
தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப
சில்லறையை வைத்து, கொஞ்சம் சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச்
சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சாக்லேட்களும் அவர் மனதில்

இந்தியாவின் 7 அதிசயங்கள்.


1.பைசா சாய்ந்த கோபுரம்,2.தாஜ்மஹால் , 3.பாரிசின் ஈஃபிள் டவர் ,
4.சீனப்பெருஞ்சுவர், 5.எகிப்திய பிரமிடு , 6.ரோமின் கொலோசீயும், 7.அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன .






இந்தியாவின் 7 அதிசயங்கள்

அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள்
என்னென்ன என்று தெரிந்துகொள்வதில்
சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன ,அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம் .

சிரபுஞ்சி வேர்ப்பாலம்


மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால்
உருவானது . மேகாலயாவின் பழங்குடியினரான ' வார் -காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில்

Saturday, December 28, 2013

ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்


ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.

பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...

2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்படபலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:

Friday, December 13, 2013

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அரண்மனை 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிட்டு ள்ள‍னர். இந்த அபூர்வ காட்சி அடங்கிய அரிய‌ வீடியோவினை கீழே காணலாம்.


M.Ed Entrance Result (IGNOU)

தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்

            நண்பர் போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை ) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ PDF கோப்பு வடிவில்....!

        "குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு ஆர்வத்தில் பொழுதுபோக்காக பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து எளிதாக படிக்க தனித்தனி தலைப்புகளாக, நேர்த்தியாக வடிவமைத்து அளித்தேன். பல நண்பர்கள் வி.எ.ஓ தேர்வுக்கும் அதே போல் அளிக்கும்படி தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். நீங்கள் கோரியபடி பாடத்திட்டம் இத்துடன் இணைப்பில் காண்க."

              "பொது அறிவு, மனத்திறன் சோதனை, கிராம நிர்வாகம் மற்றும் புதியவர்களுக்கு தேர்வு முறை குறித்த விவரங்களையும் அளித்துள்ளேன். படித்து பயன்பெறுக."


தேசிய சின்னங்கள்

தேசிய நதி
கங்கை அல்லது கேன்ஜஸ் இந்தியாவின் மிக நீண்ட நதியாகும். இது 2510 கி.மீ தூரத்திற்கு மலைகளின் மேல் ஓடிவருகிறது. இது, பகீரதி நதியாக, இமய மலையில் கங்கோத்திரி எனும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப் பகுதியில் உருவாகிறது. இது பின்னர் அலகானந்தா, யமுனா, சன், கௌதமி, கோசி, காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து கொள்கிறது. உலகிலேயே வளமான விவசாய நிலத்தையும் நெருக்கமான மக்கள் தொகையையும் கொண்டது, கங்கை நதிப் படுகையே ஆகும்,. இது, ஒரு கோடி சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது. இதன் மேல் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஹரித்துவாரில் உள்ளது. மற்றொன்று பராக்காவில் உள்ளது. இந்த ஆற்றில் மட்டுமே வாழும் கங்கை நதி டால்பின் என்னும் நீர்வாழ் உயிரினம் மிகவும் ஆபத்தான விலங்கினமாகும். கங்கையை, இந்துக்கள், இந்நிலஉலகின் மிகவும் புனிதமான ஆறாகப் கருதுகின்றனர்.

Thursday, November 14, 2013

டிவி’ பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

பிரிட்டனில், “டிவி’ பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்தில் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.
இந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் “டிவி’ பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.
இந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்.
அதே போல் ஆண் குழந்தைகளில் 27 சதவீதத்தினர் உச்சரித்து விடுகின்றனர். 4 சதவீத குழந் தைகள் மூன்று வயதை தாண்டிய போதிலும் முதல் வார்த்தையை பேசாமல் உள்ளனர். 23 சதவீத குழந்தைகள் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் போதிய உதவி இல்லாமல் தவிக்கின்றனர் இவ்வாறு இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள்.

ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட

வேர்கடலையும் சில சந்தேகங்களும்!

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு

பிரிட்ஜில் வைக்க(வே)க் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
1.வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
2.பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

Wednesday, November 13, 2013

Administrative கணக்குக்குரிய PassWord மறந்து போனால் என்ன செய்வது?

1463690_511330692295798_1821972114_nவிண்டோஸ் XP  இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விசயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும்  அட்மினிஸ்ட்ரேட்டர்  (administrator) கணக்கு மூலம் லாக் ஆன் செய்து அதனை நீக்க முடியும்.   இந்த அட்மினிஸ்ட்ரேட்டர்   கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு.   இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மறந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக   நிறுவும் முறையை    அறிந்திருப்போருக்கு     இது இலகுவான விசயமே.