Saturday, November 16, 2013

மோர்க்குழம்பு ஸ்பெஷல்

தயிர்கடலை பருப்புதுவரம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. கடலை பருப்பு = 1 கரண்டி
  2. துவரம் பருப்பு = 1 கரண்டி
  3. பச்சரிசி = அரை கரண்டி
  4. உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் = 100 கிராம்
  6. பச்சை மிளகாய் = 4
  7. இஞ்சி = அரையங்குலம்
  8. தயிர் = 2 கப்
  9. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  10. தனியா = 2 ஸ்பூன்
  11. கடுகு = அரை ஸ்பூன்
  12. சோம்பு = அரை ஸ்பூன்
  13. எண்ணெய் = 3 ஸ்பூன்
  14. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பு இவைகளை அரை மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  • இதனோடு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கி சேர்க்கவும். தனியாவை பொடி செய்து கலக்கவும். இந்த கலவையை பக்கோடாவைப் போல உதிர்த்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். தயிரை கடைந்து மிளகாய் பொடி, உப்பு போடவும்.
  • வாணலியில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து தயிரை ஊற்றி நுரைத்து வரும் வரை கொதிக்க விட்டு வெந்த பருப்பு உருண்டைகளை போட்டு கொத்தமல்லி இலை தூவவும்.
சுவையான மோர்க்குழம்பு ஸ்பெஷல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • தயிர் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் கொழுப்பை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. வேனிற் கட்டி குறைகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் பலம் பெறும். உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது.

No comments: