Saturday, November 16, 2013

புடலங்காய் பொரியல்

புடலங்காய்ஓமம்தேங்காய்
தேவையான பொருள்கள்:
  1. புடலங்காய் = அரை கிலோ
  2. வெங்காயம் = 500 கிராம்
  3. பச்சை மிளகாய் = 6
  4. தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
  5. கடுகு = அரை ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  7. ஓமம் = சிறிது
  8. எண்ணெய் = 2 ஸ்பூன்
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புடலங்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை பஞ்சு போன்ற பகுதியையும் நீக்கி விடவும். பின்பு மெல்லிய அரை வட்ட வளையங்களாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • இவை வதங்கியதும் புடலங்காய் நறுக்கியதைச் சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கி உப்பு போட்டு கால் கப் நீர் விட்டு மூடி வைக்கவும்.
  • 5 நிமிடம் கழித்துத் திறந்து அதிகப்படியான நீரை இறுத்து விட்டு ஓமம் அல்லது ஓமவல்லி இலை சேர்க்கவும். பிறகு கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான புடலங்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

No comments: